News May 7, 2024
தருமபுரி: வேலை செய்யும்போது உயிரிழந்த சோகம்!

தருமபுரி வட்டம் குண்டலபட்டி அருகே கிணற்றில் வேலை செய்யும்போது தவறி விழுந்து இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக நேற்று(மே 6) மாலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் விழுந்த மாரியப்பன் என்பவரை இறந்த நிலையிலும், மற்றொரு நபரை காயங்களுடனும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News August 28, 2025
தர்மபுரி மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

தர்மபுரி மாவட்டத்தில் இன்று(ஆக.28) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.
▶️ மீனாட்சி மஹால், தர்மபுரி
▶️ PKS மண்டபம், பாப்பாரப்பட்டி
▶️ சமுதாயக் கூடம், மாதேஹள்ளி
▶️ VPRC கட்டடம், செல்லமுடி
▶️ VM மஹால் சிக்கமாரண்ட அள்ளி
▶️ ஸ்ரீ ராகவேந்திரர் மண்டபம், கொலகம்பட்டி
முகாம்களுக்கு பொதுமக்கள் நேரில் சென்று தங்கள் மனுக்களை அளித்து தீர்வு பெறலாம், தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 27, 2025
ஆகஸ்ட் 29 ல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 29 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி ஊராட்சி மன்ற அலுவலக விளையாட்டு மைதானம், மாரவாடி, மல்லிகா பேலஸ் திருமண மண்டபம், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி சமுதாய கூடம், பூதனஹள்ளி, மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஜக்குபட்டி, பாலக்கோடு VPRC கட்டிடம், பி.கொல்லஅள்ளி, அரூர் VPRC கட்டிடம் ஜம்மனஹள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது
News August 27, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.27) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.