News January 24, 2026
PM பேச்சு CM-யை கலக்கமடைய வைத்துள்ளது: வானதி சீனிவாசன்

கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் திரண்ட பல லட்சக்கணக்கான மக்கள் கூட்டமும், “திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் ‘கவுன்டவுன்’ துவங்கி விட்டது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ‘டபுள் எஞ்சின்’ அரசு அமைவது உறுதி” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு CM ஸ்டாலினை கலக்கமடைய வைத்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 10, 2026
கோவை இரவு ரோந்து போலீசார் விபரம்!

கோவை மாவட்டத்தில் (10.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 10, 2026
AI பார்த்து பயப்பட தேவையில்லை: PM

“பரீஷா பே சர்ச்சா” எனப்படும் தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கோவையைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது AI குறித்த கேள்விக்கு, AI (அ) போனை நமது எஜமானார்களாக ஆக்கக்கூடாது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமது திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். AI-யை கண்டு பயப்பட தேவையில்லை என பிரதமர் மோடி கூறினார்.
News February 10, 2026
சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

கோவை ஆட்சியர் அலுவலகம் முன், உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ₹6,000 முதல் ₹15,000 வரை வழங்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர்கள், தமிழக அரசு தங்களை புறக்கணிப்பதாக வேதனை தெரிவித்தனர். மகளிர் உரிமைத் தொகை கேட்காமலே வழங்கப்படும் நிலையில், தங்கள் கோரிக்கையை ஏற்காததை கண்டித்து முழக்கமிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர்.


