News January 24, 2026

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உறுதிமொழி

image

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தினகரன், இளமுருகன் ஆகியோர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல் துணை கண்காணிப்பாளர் ராமலிங்கம், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பங்கேற்றனர். மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நேர்மையுடன் செயல்படுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.

Similar News

News January 25, 2026

விழுப்புரம்: வாகனம் மோதி மூதாட்டி துடிதுடித்து பலி

image

விழுப்புரம், மேல்மலையனூர் அருகே தேவனூர் புற்றுக்கோவில் பகுதியில், சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்தார். அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கிராம நிர்வாக அலுவலர் புகாரின்பேரில், வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த மூதாட்டியின் அடையாளம் & விபத்தை வாகன ஓட்டி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 25, 2026

விழுப்புரம் காவல்துறையின் இரவு ரோந்து விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 24, 2026

விழுப்புரம்: உங்கள் கனவு இல்லத்தை நினைவாக்க (CLICK)

image

விழுப்புரம் மக்களே, உங்கள் சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என நீண்ட கால ஆசை உள்ளதா? இதற்காகதான் தமிழக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்துகிறது. வீடு இல்லாதவர்கள் தகுந்த ஆவணங்களுடன் பஞ்சாயத்து ஆபீஸுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். பின் மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் வீடு கட்டிதரப்படும். வீடு கட்ட ஆசைப்படுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!