News May 7, 2024
மதுரை காந்தி அருங்காட்சியகம்

1959 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட இந்த காந்தி நினைவு அருங்காட்சியகம் மக்களின் ஆதரவும், நிதியுதவியுடன் காந்தி தேசிய நினைவு அறக்கட்டளை எழுப்பப்பட்டது. இது ராணி மங்கம்மாள் அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவகம் 1959 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவகம் ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இருக்கின்றது.
Similar News
News September 13, 2025
மதுரை: பிரபல தொழிலதிபர்கள் இடங்களில் ரெய்டு

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொழிலதிபர்கள் மணி (எ)முத்தையா மற்றும் மருது பாண்டியனுக்கு சொந்தமான எம்.வி.எம் நிறுவனங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இவர்கள் மீது சில ஆண்டுகளுக்கு முன் ‘இரிடியம்’ குறித்த பண மோசடி புகார் எழுந்தது. அடுத்தடுத்து புகார்கள் எழுந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று இங்கு சோதனையை நடத்தினர்.
News September 13, 2025
மதுரையில் கூகுள் மேப்பை பயன்படுத்தி கொள்ளை

வாடிப்பட்டி பகுதியில் அடுத்தடுத்துள்ள 4 கோயில்களில் ஆடிப்பெருக்கு அன்று இரவு உண்டியலை உடைத்து திருடிய சமயநல்லுார் ரூபன்31, சேகர் 22, வடகாடுபட்டி தமிழழகன்22 ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். 4 கிராம் தங்கம், ரூ.50,000 பறிமுதல் செய்யப்பட்டது. விக்கிரமங்கலம் பகுதியில் மதுஅருந்தும் இடத்தில் பழகி நண்பர்களான இவர்கள், விசேஷ நாட்களை நோட்டமிட்டு கூகுள் மேப்பில் கோவில்களை கண்டறிந்து திருடியது அம்பலமானது.
News September 13, 2025
ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்ற மூவர் மதுரையில் சரண்

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரும், தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளருமான ம.க.ஸ்டாலினை வெடிகுண்டுகளை வீசி கொல்ல முயன்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 3 பேர் மதுரை மதுரை மாவட்ட 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். சரணடைந்த விஜய் 27, ஆகாஷ் 30, மகாலிங்கம் 26 ஆகிய 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.