News January 23, 2026
வேலூர் வேலைவாய்ப்பு முகாமில் 2786 பேர் தேர்வு!

வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட 11 தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 401 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 6,211 பேர் பங்கேற்றனர். அவர்களில் 39 மாற்றுத்திறனாளிகள் உள்பட 2,786 பேர் தேர்வு செய்யப்பட்டு முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News February 1, 2026
வேலூர்: தூக்கில் முடிந்த தொழிலாளியின் ஆயுள்!

வேலூர் துத்திப்பட்டு எம்.ஜி.ஆர்.தெருவை சேர்ந்தவர் விஷ்ணு (41), கூலி தொழிலாளி. இவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் விஷ்ணு நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஷ்ணு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 1, 2026
வேலூர் தாய்மார்களுக்கு ரூ.11,000! CLICK HERE

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது<
News February 1, 2026
வேலூர் போலீசின் அதிரடி வேட்டை – 4 பேர் கைது!

பேரணாம்பட்டு பகுதியில் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக பேரணாம்பட்டு போலீசாருக்கு நேற்று (ஜனவரி.31) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு (ரகுராம் 44) அருண்குமார் (33), கலைஞர் (56), கோவிந்தராஜ் (40), ஆகிய 4 பேரும் வீடுகளில் விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


