News January 23, 2026
கம்பம்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கம்பம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (35). இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த ஒரு வருடங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். அதனால் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த அருண்குமார் நேற்று முன் தினம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Similar News
News February 12, 2026
தேனி மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

தேனி மாவட்ட மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.
News February 12, 2026
தேனி: பைக் மீது கார் மோதியதில் ஒருவர் படுகாயம்

கொடைக்கானலை சேர்ந்த ஆண்டோ கிளாட்வின் (34) என்பவர் நேற்று முன் தினம் அவரது பைக்கில் தேனி வந்துவிட்டு மீண்டும் கொடைக்கானல் திரும்பி உள்ளார். அடுக்கம் சாலை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்திசையில் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் ஆண்டோ கிளாட்வின் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு (பிப்.11) பதிவு செய்து விசாரணை.
News February 12, 2026
தேனி: தங்கை உறவுள்ள சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்

தேனி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன்(30). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இவர் 17 வயது தங்கை உறவு முறை கொண்ட சிறுமியை சில மாதங்களுக்கு முன் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த புகாரில் தேனி மகளிர் போலீசார் தமிழரசன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை.


