News January 23, 2026
நாமகிரிப்பேட்டை அருகே விபத்து: ஒருவர் பலி

நாமகிரிப்பேட்டை அருகே திம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி சிலம்பரசன்(45), நேற்று காலை ஸ்கூட்டரில் வேலைக்குச் சென்றபோது, ராசிபுரத்திலிருந்து வந்த மற்றொரு டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹெல்மெட் கழன்று விழுந்து தலையில் பலத்த காயமடைந்த சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மங்களபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 18, 2026
நாமக்கல் அருகே சிறுமியை சீரழித்த நபர் கைது!

நாமக்கல் மாவட்டம், நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சிறுமிக்கு பாலியல் ரீதியான தொல்லை அளித்ததாகப் பதிவான புகாரின் அடிப்படையில், வீரமணி(34) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
News February 18, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பிப்ரவரி 20 அன்று முற்பகல் 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்துகொண்டு சாகுபடி தொழில்நுட்பங்கள், மானியத் திட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். SHAREIT
News February 18, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.


