News January 23, 2026
இனி Wifi வேகம் அதிகரிக்கும்!

இந்திய தொலைத்தொடர்புத் துறை, மே 2025ல் 6 GHz அலைவரிசையில் 500 MHz அலைக்கற்றையை Wi-Fi சேவைகளுக்காக பொது பயன்பாட்டிற்கு விடுவிப்பதாக முன்மொழிந்தது. இந்நிலையில், 6 GHz Wi-Fi பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், இனி வீடுகள் மற்றும் அலுவலகங்களில் Wifi வேகம் அதிகரிக்கும். மேலும், இதை உபயோகிக்க உரிமம் தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News February 4, 2026
BREAKING: அரசு அறிவித்தது.. தமிழக மக்களுக்கு அதிர்ச்சி

TN-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக ஒரு லட்சத்தை கடந்துள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2012-ல் 53,022 ஆக இருந்த பாதிப்பு, கடந்தாண்டில் அது இரு மடங்காக(1,00,097) அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 8,505, காஞ்சியில் 7,295, வேலூரில் 6,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் அதிகளவில் மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
News February 4, 2026
75% சொத்தை நன்கொடையாக வழங்கும் அனில் அகர்வால்!

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால், தனது மொத்த சொத்துக்களில் 75% ஐ சமூகத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். சுமார் ₹41,400 கோடி சொத்து மதிப்புடைய அவர், இனி நிறுவனத்தின் அறங்காவலராக பணியாற்ற உள்ளதாகவும், மறைந்த தனது மகன் நினைவாக கல்வி, சுகாதாரத் துறைகளில் ₹15,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். PM மோடியை சந்தித்த பிறகு இந்த முடிவை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
News February 4, 2026
CM வேடிக்கை பார்ப்பது வெட்கக் கேடானது: விஜய்

ஊடகவியலாளர்கள் மீது <<19004158>>கொடூரத் தாக்குதல்<<>> நடத்திய திமுக MLA மீது FIR பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். குவாரி தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் டிவி ஊடகவியலாளர்கள் மீது பழனியாண்டி தாக்குதல் நடத்திய வீடியோ அண்மையில் வெளியானது, ஆனால் அதன் பிறகும் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல் CM வேடிக்கை பார்ப்பது வெட்கக் கேடானது என சாடியுள்ளார்.


