News January 23, 2026
ஜனவரி 23: வரலாற்றில் இன்று

*1897 – சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள். *1957 – சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. *1973 – அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் வியட்நாமுடன் சமாதான ஒப்பந்தத்தை அறிவித்தார். *2004 – மத்தியப் பிரதேசத்தில் பசுவதைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது. *2005 – ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மணமகன் உள்பட 62 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News February 18, 2026
அரசியல் தலைவர்களுக்கு SC அறிவுரை!

நாட்டில் வெறுப்பு பேச்சு அதிகரித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் சகோதரத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் என SC அறிவுறுத்தியுள்ளது. வெறுப்பு பேச்சுகளை தடுக்க ஏற்கெனவே வழிகாட்டுதல்களை (SOP) வெளியிட்டுள்ளோம்; ஆனால் பொதுமேடைகளில் கட்டுப்பாட்டை மீறினால் SOP-க்கு பயனில்லை என்றும், வெறுப்புப் பேச்சை எதிர்த்துப் போராடுவதற்கு சட்டங்களை விட மக்களின் மனநிலையில் ஆழமான மாற்றம் தேவை என்றும் தெரிவித்துள்ளது.
News February 18, 2026
காதலியை கொலை செய்து சடலத்துடன் உறவு.. SHOCKING

காதலர் தினத்தன்று காதலியை கொலை செய்துவிட்டு சடலத்துடன் உறவு கொண்ட கொடூர இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தூரில் 24 வயது பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பான போலீஸ் விசாரணையில் பெண்ணின் காதலன், பியூஷ் தம்னோடியா, ஆவியுடன் உரையாட விரும்பியதால் இதை செய்ததாக நூதன வாக்குமூலத்தை அளித்துள்ளார். இதைக் கேட்டு போலீசாரே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
News February 18, 2026
234 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தும் சீமான்

திருச்சியில் வரும் 21-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் நாதகவின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்த உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். TN அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அந்த மாநாடு இருக்கும் எனவும், அன்றிலிருந்து நாதகவினர் தேர்தல் பணியில் முழுவீச்சில் ஈடுபடுவார்கள் என்றார். படைக்கு தலைமையேற்கும் தளபதி போரில் பங்கேற்க மாட்டாரா என்று கூறி, தான் தேர்தலில் போட்டியிடுவதையும் உறுதி செய்தார்.


