News May 7, 2024
ஈரோடு மாவட்டத்திற்கு எச்சரிக்கை

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 28, 2025
ஈரோடு 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

கோவை சரகத்தில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. சசிமோகன் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மணிகண்டன் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவர் உட்பட மற்றும் 7 பேர் பணியிட மாற்றம்.
News August 27, 2025
ஈரோடு: தினமும் ரூ.1200 சம்பளம் தரும் வேலைக்கு FREE பயிற்சி

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக நாளை ஆக.28 முதல் அக்.4ஆம் தேதி வரை இலவச கட்டட கட்டுமானப் பயிற்சி நடைபெறுகிறது. இதில் பங்குபெறுவோருக்கு ஹாஸ்டல் வசதி, உணவு அனைத்தும் இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 0424-2400338, 8778323213 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஈரோடு மக்களே யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க!
News August 27, 2025
ஈரோடு: இலவச வீட்டு மனை வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக வீட்டுமனை பெறலாம்.இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்து மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!