News January 23, 2026
கோவை அதிவிரைவு ரயில் திருவள்ளூரில் கூடுதலாக நிறுத்தம்.

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சசிகாந்த் செந்தில் அவர்களின் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 2 அதிவிரைவு ரயில்கள் நின்று செல்ல ரயில்வே அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து வரும் 26-ந்தேதி முதல் கோயம்புத்தூர் – சென்ட்ரல் அதிவிரைவு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும் திருவள்ளூரில் இரவு 9:48 க்கு வந்து 9:50 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
Similar News
News March 11, 2026
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 10, 2026
திருவள்ளூரில் வாடகை வீட்டில் ஹவுஸ் ஓனர் பிரச்சனையா?

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 என்ற எண்ணில் புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி வாடகை அதிகாரியிடம் புகார் செய்யலாம் . ஷேர் பண்ணுங்க.
News March 10, 2026
சித்தம்பாக்கம் ஏரியில் மண் குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு!

திருவள்ளூர்: சித்தம்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஏரி சுற்றுவட்டாரத்தில் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டால் நீர்நிலைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், விவசாயம் மற்றும் குடிநீர் வளம் குறையும் என்றும் கூறி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


