News January 22, 2026

கிருஷ்ணகிரி: நகை திருடு போச்சா? கவலை வேண்டாம்!

image

தமிழகத்தில் நகை உள்ளிட்ட உடமைகள் திருடு போனால், பொதுமக்கள் காவல் நிலையம் செல்லாமலேயே<> TN Police Citizen Services<<>> இணையதளம் அல்லது ‘Citizen’s Mobile App’ மூலம் ஆன்லைனில் எளிதாகப் புகார் அளிக்கலாம். இதில் பெறப்படும் புகார்களுக்கு ரசீது வழங்கப்பட்டு, உரிய விசாரணை நடத்தப்படும். இந்தத் தொழில்நுட்ப வசதி மூலம் பொதுமக்கள் தங்கள் புகாரின் நிலையை வீட்டிலிருந்தே கண்காணித்துத் தீர்வுகளைப் பெற முடியும். ஷேர்!

Similar News

News February 19, 2026

கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்று (பிப்.19) நீர்மட்டம் 49.3 முதல் 49.35 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் தொடர் மழை மற்றும் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

News February 19, 2026

கிருஷ்ணகிரி: பற்றி எரிந்த வீடு; கதறிய குழந்தைகள்!

image

அணைக்கட்டை சேர்ந்த மாதேஷ் (32)- வரலட்சுமி (27) தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மனைவியுடன், மாதேஷ் வேலைக்கு சென்று விட்டார். ஓலை வீட்டில் குழந்தைகள் 2 பேரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீடு திடீரென தீப்பிடிக்க குழந்தைகள் வெளியே ஓடி விட்டனர். முற்றிலும் கருகிய வீட்டில் ரூ.40 ஆயிரம், 1 பவுன் தங்க நகை சாம்பல் ஆகின. இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

News February 19, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.18) இரவு முதல் இன்று (பிப்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!