News January 22, 2026

கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது: SC

image

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனவும், இதில் தலையிட்டு எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்றும் SC தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என தொடரப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக SC உத்தரவின்பேரில் CBI விசாரணை நடத்தி வருவது கவனிக்கத்தக்கது.

Similar News

News January 31, 2026

வெற்றிக் கூட்டணியை கண்டறிவதில் சிக்கல்: GK மணி

image

கூட்டணி தொடர்பாக அனைத்து தரப்பும் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாமக(ராமதாஸ் அணி) கெளரவ தலைவர் GK மணி தெரிவித்துள்ளார். விருப்பமனு அளித்தவர்களிடம் தைலாபுரத்தில் இன்றுமுதல் நேர்காணல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், வெற்றிக் கூட்டணியை கண்டறிவதில் சிக்கல் இருப்பதால் தாமதம் ஏற்படுவதாக கூறினார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

News January 31, 2026

துப்பாக்கிச் சத்தத்தால் அதிரும் ஜம்மு காஷ்மீர்

image

ஜம்மு-காஷ்மீரின் டோல்காமில் பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூட்டில் நடத்தியுள்ளனர். ஜனவரி 18-ம் தேதி தொடங்கிய ‘ஆபரேஷன் த்ராஷி-I’-ன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது, இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதால் ராணுவம், போலீஸ் மற்றும் CRPF இணைந்து அப்பகுதியை கட்டுப்பாட்டில் எடுத்து, இணைய சேவையையும் தடை செய்துள்ளனர்.

News January 31, 2026

மக்களை சந்திக்கிறார் விஜய்..!

image

பிப்ரவரி மாதத்தில் தவெக சார்பில் வேலூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான உரிய அனுமதியை பெறும் நடவடிக்கை துவங்கியுள்ளதாம். காவல்துறையின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பிப்ரவரி 2-வது வாரத்தில் விஜய் மக்களை சந்திப்பார் என்கின்றனர். ஈரோடு பிரச்சாரத்திற்கு பிறகு சுமார் 2 மாதங்களுக்கு விஜய் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!