News January 22, 2026

கடலூர்: சிறுமி கர்ப்பம் – இளைஞர் மீது போக்சோ வழக்கு

image

பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை 22 வயது வாலிபர் ஒருவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, தனிமையில் இருந்துள்ளார். இதில் கர்ப்பமான சிறுமி சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கிருந்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமானது குறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், பண்ருட்டி போலீசார் வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News February 8, 2026

வாய்க்காலில் தவறி விழுந்து இளைஞர் பலி

image

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கீழகடம்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர், நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக வாய்க்காலில் தவறி விழுந்ததில், விஷ்வா என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மணமுடைந்த பெற்றோர்கள், வீட்டில் திருமணம் நிகழ்வு நடைபெற இருந்த நிலையில், தற்பொழுது சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளதால், பெரும் சோகமடைந்தனர்.

News February 8, 2026

கடலூர்: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 8, 2026

கடலூர்: 63 பேருக்கு தொழுநோய் பாதிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் கடந்த வருடம் ஏப்.1 ஆம் தேதி முதல் கடந்த ஜன.31 ஆம் தேதி வரை 63 பேருக்கு தொழுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தொழுநோய் பரவல் விகிதம் 10 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற அளவில் உள்ளதாக மாவட்ட தொழு நோய் அதிகாரி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!