News January 22, 2026

திருவாரூர்: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 26, 2026

திருவாரூரைச் சேர்ந்தவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

image

குடியரசு தினத்தையொட்டி, 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிருதங்க கலைஞரான பக்தவத்சலம் என்பவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசைத்துறையிலும், மிருதங்க கலையிலும் அவர் ஆற்றிய பணிக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 26, 2026

BREAKING திருவாரூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் குடமுழக்கு விழா வரும் ஜன.28-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை ஈடுசெய்யும் வகையில் பிப்.7-ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 3 தாலுக்காக்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News January 26, 2026

திருவாரூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

திருவாரூர் மக்களே இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!