News May 7, 2024

ஏழ்மை நிலையில் சாதித்த மாணவி…!

image

கன்னியாகுமரியை பூர்வீகமாகக் கொண்ட மாணவி கோகிலா மதுரை சோலையழகுபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்துக்கொண்டு 12ம் வகுப்பு தேர்வு எழுதினார். தந்தையை இழந்தும், சுயநினைவை இழந்த தாயை பராமரித்து வந்த மாணவி கோகிலா 4 பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தும் 600-க்கு 573 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தாய்க்கு தாயாக இருந்து ஏழ்மை நிலையிலும் சாதித்த மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Similar News

News November 27, 2025

மதுரை ஐகோர்டில் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

image

மதுரை மாவட்டம் ஏழுமலை அடுத்த கோட்டைப்பட்டி சேர்ந்தவர் மகாலிங்கம். 2023 இல் தமிழக காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். நேற்று இரவு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அது சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனக் கூறி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் ஐகோர்ட் போலீசார் விசாரிக்கின்றனர்

News November 27, 2025

மதுரை: சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு போக்சோ

image

திருப்­ப­ரங்­குன்­றம் நடுத்­தெருவை சேர்ந்­த­வர் முரு­கன் மகன் கார்த்திக் (27). இவர் 17 வயது சிறுமியை சோழ­வந்­தான் கோவிலில் வைத்து ரக­சிய திரும­ணம் செய்து கொண்­டார். இதில் சிறுமி 5 மாத கர்ப்­ப­மா­னார். இதையறிந்த திருப்­பரங்­குன்­றம் மக­ளிர் ஊர்­ நல அலு­வ­லர் பத்மா அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்­தார். போலீசார் கார்த்திக் மீது நேற்று போக்சோ சட்­டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

News November 27, 2025

மதுரை: கணவர் அடித்தால் CALL பண்ணுங்க!

image

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. கணவன் தொல்லை, குடும்ப வன்முறை, வேலைத்தளங்களில் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை நடந்தால் பெண்கள் உடனடியாக 181 உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை காக்க 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுகிறது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!