News January 22, 2026

கிருஷ்ணகிரி பகுதிகளில் கிராம சபை கூட்டம்

image

தமிழகத்தில் வரும் ஜன-26 குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களை நடத்த ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கூட்டங்களை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் நடத்தவும், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News January 30, 2026

கிருஷ்ணகிரி: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

கிருஷ்ணகிரி மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>ibpsreg.ibps.in/nabhindec25/<<>> – என்ற தளத்தில் பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News January 30, 2026

கிருஷ்ணகிரியில் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

image

மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

கிருஷ்ணகிரியில் அடிதடி; 5 பேர் மீது வழக்கு!

image

ராயக்கோட்டை அடுத்த பழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவருக்கும் இவரது தம்பி பெத்தேகவுடாவுக்கும் நிலப்பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று (ஜன.29) நிலத்தின் அருகே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் சண்டையிட்டு கொண்டனர். இதையடுத்து இருதரப்பையும் சேர்ந்த கோவிந்தன், மஞ்சுளா, ரமேஷ், சந்திரம், பெத்தேகவுடா ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!