News January 22, 2026

ராணிப்பேட்டையில் தூக்கி வீசப்பட்டு பலி!

image

அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருத்தணி – பொன்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 3, 2026

ராணிப்பேட்டையில் கொடூர தாக்குதல்!

image

மருதம்பாக்கம் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் மவுண்டன் (33). இவர் நேற்று முன்தினம் ஏகாம்பரநல்லூர் முத்தாலம்மன் கோயில் வழியாக சென்று கொண்டிருந்த போது முன் விரோதம் காரணமாக அவரை ஒரு கும்பல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் வாலாஜாபேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபன் (38), சதீஷ்குமார் (35), நவீன் (31) ஆகியோரை கைது செய்தனர்.

News February 3, 2026

ராணிப்பேட்டையில் தூக்கில் தொங்கிய மாணவி!

image

கலவை, இருங்கூரை சேர்ந்த +1 மாணவி மதுமதி. நேற்று முன்தினம் மாணவிக்கு வீட்டில் பிறந்தநாள் விழா கொண்டாடபட்டது. இந்நிலையில் நேற்று (ஜன.2) வீட்டில் தனியாக இருந்த மதுமதி காலை 10 மணியளவில் வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வாழைப்பந்தல் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News February 3, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்-02) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!