News January 22, 2026

ஏர் இந்தியாவால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?

image

ஏர் இந்தியா’ நிறுவனம் சென்னை – துபாய் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த விமான சேவையை மார்ச் 29 முதல் நிறுத்த இருக்கிறது. இதனால், பயணிகளுக்கு டிக்கெட் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக கொழும்பு சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து ஏர் இந்தியா வெளியேறுவது போல உள்ளதாக விமான போக்குவரத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

Similar News

News March 26, 2026

3 மணி நேரம் காத்து கிடந்த துரைமுருகன்: வேல்முருகன்

image

கூட்டணியில் இருந்து வெளியே வந்த வேல்முருகன் முதலமைச்சரின் செயலாளர் மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார். துரைமுருகன் முதல்வர் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்ததாகவும் ஆனால் அவரை செயலாளர் பார்க்க மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால், துரைமுருகன் கண்ணீருடன் வீடு திரும்பினார் என்றும், அவரை வழியனுப்பி வைத்தது தான்தான் எனவும் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

எரிவாயு நெருக்கடி.. அர்ஜென்டினாவின் ஆதரவு

image

மேற்கு ஆசியப் போரினால் இந்தியாவில் ஏற்பட்ட LPG பற்றாக்குறையை ஈடுசெய்ய அர்ஜென்டினா முன்வந்துள்ளது. 2026-ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில், இந்தியாவுக்கு 50,000 டன் எரிவாயுவை அனுப்பியுள்ளது. இது கடந்தாண்டு ஏற்றுமதியின் மொத்த அளவை விட 2 மடங்குக்கும் அதிகமாகும். சுமார் 20,000 கி.மீ. பயணம், அதிக போக்குவரத்து செலவுகள் இருந்தும், இந்தியாவின் எரிசக்தி தேவைக்கான தனது பங்களிப்பை அர்ஜென்டினா அதிகரித்துள்ளது.

News March 26, 2026

மதுரையில் 600 டீ கடைகள் மூடல்

image

மதுரை மாநகரில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக 600 டீ கடைகளை மூடியுள்ளனர். இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடை நடத்துபவர்கள் சிலிண்டரை அதிக விலை கொடுத்து வாங்கி வருவதாகவும், உணவு தொழில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் மாநகர் டீ கடை சங்கத்தின் துணை செயலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் சிறிய அளவிலான கடைகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

error: Content is protected !!