News January 22, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான புகார்கள் அல்லது தகவல்கள் இருந்தால், 1098 என்ற அவசர உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
திண்டுக்கல்லில் பெண்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

திண்டுக்கல் அருகே பாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சின்னையா. இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள் கருத்தம்மாள், உறவினர் பஞ்சவர்ணம் ஆகிய 3 பேரும், நேற்று இரவு வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் திடீரென புகுந்த மர்ம கும்பல், 3 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து திண்டுக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 25, 2026
திண்டுக்கல்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திண்டுக்கல் மாவட்ட மக்கள் 0451-2461828 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News January 25, 2026
திண்டுக்கல் மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். <


