News January 21, 2026
குடியாத்தம் அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஜன.21) குடியாத்தம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பரதராமி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியை பார்வையிட்டு, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவினை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா.மற்றும் கோட்டாட்சியர் சுபலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.
Similar News
News February 3, 2026
வேலூர் மாவட்ட வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் டிச.19 முதல் ஜன.30 வரை பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்காக மொத்தம் 62,802 விண்ணப்பங்கள் (நேரடியாகவும், இணையதளம் வழியாகவும்) பெறப்பட்டுள்ளன. இதில் புதியதாக பெயர் சேர்க்க (படி6) மட்டும் 39,170 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனடிப்படையில் (பிப்17) புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News February 3, 2026
வேலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
News February 3, 2026
வேலூரில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<


