News January 21, 2026

JUSTIN: ஊட்டியில் அமைகிறது டைடல் பார்க்!

image

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று முதல் துவங்கியது. தமிழக ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களில், தமிழகத்தில் 14 மாவட்டங்களில் புதிய டைட்டில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் நீலகிரி மாவட்டம் இடம்பெற்றுள்ளது. மாவட்ட தலைநகர் ஊட்டியில் புதிய டைட்டில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 12, 2026

நீலகிரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

நீலகிரியில் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

News February 12, 2026

நீலகிரி: ரேஷன் கடை மீது புகாரா? இத பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி ஊழியர்கள் வாங்க சொல்வது (அல்லது) வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறைவாக உள்ளதா? உடனே 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) இங்கு <>கிளிக் <<>>செய்து நீங்கள் புகார் அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி, அவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News February 12, 2026

நீலகிரி: 80 பேர் அதிரடி கைது

image

நீலகிரி மாவட்டத்தில், பந்தலூர் வட்டம் சேரங்கோடு கிராமம் சேரம்பாடி பஜாரில் கனரா வங்கிக்கு முன் CITU தொழிற்சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜன் தலைமையில் சுமார் 80 பேர் மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்கள் அனைவரும் 11.45 மணிக்கு கைது செய்யப்பட்டு, சேரம்பாடி சுங்கம் பகுதியில் உள்ள St. Sebastian Church Hall ல் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!