News January 21, 2026

கிருஷ்ணகிரியில் மனதை உலுக்கும் சம்பவம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை பகுதியைச் சேர்ந்த காயத்ரி (16) என்ற சிறுமி, நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த காயத்ரி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 8, 2026

கிருஷ்ணகிரி: தீயில் விழுந்து துடிதுடித்து பலி!

image

குருபரப்பள்ளி அடுத்த ஜிங்களூரை சேர்ந்தவர் ஷேக் பையாஸ். இவர் தொடர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.6) வீட்டில் சமையல் செய்யும் போது திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த தீயில் விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.7) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 8, 2026

கிருஷ்ணகிரி: மகனை சுட்ட கொடூர தந்தை!

image

தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி வீரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் மாணிக்கம். நேற்று (பிப்.7) மதுபோதையில் இருந்த மாதப்பணுக்குமவரது மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மாதப்பன் தனது மகனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் மாணிக்கம் காயமடைந்தார். இதையடுத்து உரிமமின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக அஞ்செட்டி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

News February 8, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு முதல் இன்று (பிப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!