News January 21, 2026

ராணிப்பேட்டையில் கூண்டோடு கைது!

image

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிறுத்தத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் நேற்று (ஜன.20) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சத்துணவு ஊழியர்களுக்கு கால வரை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை, அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News January 31, 2026

9 சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் எஸ்பி உத்தரவு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஜனவரி 31ம் தேதி 9 சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை எஸ்பி அய்மன் ஜமால் பிறப்பித்துள்ளார். உத்தரவில் ராணிப்பேட்டை ஸ்டேஷனில் பணியாற்றி வரும் சப் இன்ஸ்பெக்டர் பசலை ராஜ் அரக்கோணம் தாலுகாவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கலவையில் பணியாற்றி வந்த அமரேசன் அரக்கோணம் டவுனுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோன்று 9 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

News January 31, 2026

ராணிப்பேட்டை காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தினசரி இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாகன ரோந்து, கால்நடை ரோந்து என இருவிதமாகவும் பணி செய்து வருகின்றனர்.

News January 31, 2026

ராணிப்பேட்டை: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!