News January 21, 2026
வேலூர்: மாணவர்களுக்கு பாஸ் வழங்கிய ஆட்சியர்

கன்னியாகுமரியில் ஜன.23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வழித்தடப் பாஸ்களை வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (ஜன.20) வழங்கினார். மாணவர்களின் கல்வி, இலக்கிய ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News February 6, 2026
வேலூர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

வேலூர் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
வேலூரில் அதிரடி மாற்றம்!

வேலூரில் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தீனதயாளன், வேலூர் தாலுகா துணை தாசில்தாராகவும், குடியாத்தம் தாலுகா முன்னாள் தலைமையிடத்து துணை தாசில்தார் மஞ்சுநாதன், மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தலைமை உதவியாளராகவும் பணியிட மாற்றம் பெற்று உள்ளனர். மேலும் அங்கு பணியாற்றிய நதியா, வேலூர் நெடுஞ்சாலைகள் தனி மாவட்ட வருவாய் அலுவலக நேர்முக உதவியாளராக பணியிட மாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
News February 6, 2026
வேலூர்: சினிமா பாணியில் சேஸ் செய்து போலீசார் அதிரடி!

பரணாம்பட்டு -வீ.கோட்டா சாலையில் பேரணாம்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எருக்கம்பட்டு-கோட்டையூர் வழியாக 2 பேர் கர்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்தனர். இதையறிந்த போலீசார் பைக்கில் 1 கி.மீ தூரத்துக்கு சினிமா பாணியில் துரத்தி சென்றனர். இதையறிந்த ஆசாமிகள் ரூ. 1 லட்சம் மதிப்பிலான மதுபாக்கெட்டுகள் போட்டுவிட்டு தப்பினர். போலீசார் தற்போது தப்பி ஓடியவர்கள் தேடி வருகின்றனர்.


