News January 21, 2026

காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து 35 இடங்களில் திருட்டு!

image

காஞ்சிபுரம் அருகே 35 இடங்களில் மின் மாற்றிகளின் உதிரிபாகங்கள் மற்றும் எண்ணெயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் ஆழ்துளை கிணற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் போலீசில் புகாரளித்துள்ளனர். எப்.ஐ.ஆர் பதிவு செய்தபின், புதிய மின் மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

Similar News

News February 8, 2026

காஞ்சி: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card போன்ற Spam Calls வந்தாலே, செம கடுப்பாகும். காஞ்சி மக்களே, இனி டென்ஷன் வேண்டாம். தேவையில்லாத அழைப்புளை ஈசியாக தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம் (அ) ‘START 0’ என 1909-க்கு SMS அனுப்பினால் Spam Call-ல் வரவே வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 8, 2026

காஞ்சி: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, காஞ்சி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க.

News February 8, 2026

காஞ்சி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் <<>>செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!