News January 21, 2026
சேலம்: ஒரே ஆண்டில் 377 போ் பலி!

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சேலம், தருமபுரி, ஓசூர், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் எல்லைகளில் மொத்தம் 377 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்டவாளத்தைக் கடப்பது மற்றும் கவனக்குறைவே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
Similar News
News February 2, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
News February 2, 2026
பள்ளி மாணவி கர்ப்பம்

சேலம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த 28-வயது ஓட்டுநர் திவாகர், 17-வயது பள்ளி மாணவியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவரை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டுள்ளார். இதனால் மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் திவாகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 2, 2026
சேலம் சரக்கு போக்குவரத்து மூலம் ₹244 கோடி வருவாய்

சேலம் ரயில்வே கோட்டம் நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 2.577 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு ₹244.26 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10.3% அதிகமாகும். வருவாயை மேலும் அதிகரிக்கச் சேலம், கோவை, கரூர், ஈரோடு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். சரக்கு போக்குவரத்தில் சேலம் கோட்டம் தொடர்ந்து அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது.


