News January 21, 2026

நெல்லையில் ஒருவர் மீது குண்டர் சட்டம்

image

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் கண்ணன் என்பவரை ரெட்டியார்பட்டி எஸ்.ஆர்.குளத்தைச் சேர்ந்த ஜெகன் (32) பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டியுள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த ஜெகன் ஆணையர் மணிவண்ணன் ஆணைப்படி இன்கு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News February 18, 2026

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்ட தேதி அறிவிப்பு

image

பிப்ரவரி மாதத்திற்கான நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 20ம் தேதி மூன்றாவது வெள்ளிக்கிழமை பகல் 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக இரண்டாம் தளம் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. ஏற்கனவே வழங்கிய கோரிக்கைகள் மீது பதில் அளிக்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News February 18, 2026

5 மாவட்ட பயிற்சியாளர்களுக்கு தடகளப் போட்டி தேதி அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பு 2025 – 26ம் ஆண்டிற்கான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல பயிற்சியாளர்களுக்கான தடகள விளையாட்டு போட்டி 24ம் தேதி காலை 9 மணி முதல் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அந்தந்த மாவட்ட தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற அரசு, தனியார் தொழிற் பயிற்சி நிலைய ஆண், பெண் பயிற்சியாளர்கள் பங்கேற்பார்கள்.

News February 18, 2026

நெல்லை: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை பெற வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!