News January 21, 2026
சனிக்கிழமை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் உண்டு

கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழையால், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. அந்தவகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக நவ.24-ல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இதனை ஈடுசெய்யும் விதமாக வருகிற சனிக்கிழமை (ஜன.24) அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
Similar News
News February 3, 2026
பிரபல இசையமைப்பாளர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

பழம்பெரும் இசையமைப்பாளர் SP வெங்கடேஷ்(70) மாரடைப்பால் காலமானார். கிட்டார் கலைஞராக இசைப் பயணத்தை தொடங்கிய அவர், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘உனக்காக என் காதல்’, ‘பிஞ்சு மனசு’ உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ள வெங்கடேஷ், ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நாளை நடைபெறவுள்ளது. RIP
News February 3, 2026
வரியை குறைக்க வைத்த இந்தியாவின் ராஜதந்திரம்

இந்தியாவை ‘Tariff King’ என விமர்சித்த US அதிபர் டிரம்ப், தற்போது நண்பர் என்று கூறி வரியை குறைத்துள்ளார். US-ன் கூடுதல் வரிவிதிப்புக்கு பிறகு இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்தது போன்றவை USA-ஐ கலங்கடித்திருக்கலாம் எனப்படுகிறது. அதன் காரணமாகவே, US அதிபர் வரியை 50%-ல் இருந்து 18%-ஆக குறைத்து அறிவித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
News February 3, 2026
ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகினாரா? CLARITY

கடந்த சில மாதங்களாக தலைகாட்டாமல் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், விரைவில் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தனது உயிர் உள்ளவரை அதிமுகவிலேயே நீடிப்பேன் என, கட்சி மாறப்போவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், வரும் தேர்தலில் தொகுதி மாறப் போவதாக (தற்போது ராயபுரம்) வரும் தகவலிலும் உண்மையில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.


