News January 21, 2026
TN-ல் கூலிப் படைகளின் அட்டூழியம்: TTV தினகரன்

குற்ற சம்பவங்கள், கூலிப் படைகளின் அட்டூழியம் என TN-ல் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது என்று TTV தினகரன் கூறியுள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் போராடிக்கொண்டிருப்பதாக கூறிய அவர், இந்நேரத்தில் எல்லார்க்கும் எல்லாம் என்பதுபோல அரசு செயல்படுவதாக கூறி பெருமை பேசுவது கேலிக்கூத்தானது என்றார். மேலும், மக்கள் மத்தியில் கவர்னர் உரை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 8, 2026
விஜய்யுடன் சசிகலா கூட்டணியா?

ஜெயலலிதா பிறந்த நாளான வரும் பிப்.24-ம் தேதி ராமநாதபுரம் (அ) மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த சசிகலா முடிவு செய்துள்ளார். அப்போது தனிக்கட்சி அறிவிப்பை அவர் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தவெகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவிலும் சசிகலா உள்ளதாகவும் அவரது வட்டாரத்தில் கூறப்படுகிறது. சசிகலாவின் இந்த திடீர் முடிவு EPS, TTV தினகரன் ஆகியோருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
News February 8, 2026
உங்கள் உடல் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் சிறுநீர்!

சிறுநீர் பரிசோதனை மூலம் பல நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய முடியும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தாலோ அல்லது ரத்தம் சேர்ந்து வந்தாலோ, அது கல்லீரல் அல்லது சிறுநீரக கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீர் துர்நாற்றம் வீசினால், ஏதேனும் தொற்று இருக்கலாம். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி பரிசோதனை செய்வது அவசியம்.
News February 8, 2026
மகளிர் உரிமைத் தொகை ₹2,500.. மகிழ்ச்சியான செய்தி

தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் மகளிருக்கு மாதம் ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வந்தது. இம்மாதம் முதல் அங்கு உரிமைத் தொகை ₹2,500-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகை உயர்வால் , அம்மாநில அரசுக்கு கூடுதலாக ₹17.50 கோடி செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் தேர்தலையொட்டி மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.


