News January 20, 2026
கவர்னர் தேநீர் விருந்தில் விசிக பங்கேற்காது: திருமாவளவன்

சட்டமன்றத்தை அவமதித்த கவர்னரின் போக்கை வன்மையாக கண்டிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், மரபை மீறி தேசிய கீதத்தை துவக்கத்திலேயே ஏன் இசைக்கவில்லை என்பது குதர்க்கவாதம் என்றும், கவர்னரின் செயல் திராவிடக் கருத்தியலுக்கு எதிரான ஒவ்வாமையின் வெளிப்பாடு எனவும் விமர்சித்துள்ளார். அத்துடன் குடியரசு நாளை ஒட்டி கவர்னரின் தேநீர் விருந்தில் விசிக இந்தாண்டும் பங்கேற்காது என்பதையும் அறிவித்துள்ளார்.
Similar News
News February 9, 2026
வேக்போஸ்டிங் டிரெண்ட் பற்றி தெரியுமா?

சமீபத்தில் SM-ல், இது என்ன? இதில் சொல்ல வருகின்றனர்? போன்ற அர்த்தமற்ற பதிவுகளை அதிகம் பார்க்கிறீர்களா? இதை வேக்போஸ்டிங் (Vagueposting) என்று அழைக்கின்றனர். இது தற்போதைய இளம் தலைமுறையினரிடையே ட்ரெண்டாக உள்ளது. மற்றவர்களின் ஆர்வம் மற்றும் எதிர்வினைகளைத் தூண்டும் நோக்கத்துடன் பதிவிடுவதை சிலர் புத்திசாலியான கவன ஈர்ப்பு உத்தி என பாராட்டினாலும், பலர் அர்த்தமற்றது என விமர்சிக்கின்றனர்.
News February 9, 2026
இந்தியர்களை பாதிக்கும் கல்லீரல் நோய்.. எச்சரிக்கை

சமீபத்திய Lancet ஆராய்ச்சி முடிவின்படி, இந்தியாவில் 4-ல் 1 நபர் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மது பழக்கம் இல்லாவிட்டாலும், உடல் பருமன் மற்றும் நீரிழிவால் ஏற்படும் கொழுப்பு கல்லீரல் பாதிப்பு முதியோர்களிடத்தில் அதிகளவு காணப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது இறுதியில் கல்லீரல் சுருக்கம் அல்லது கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
News February 9, 2026
₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு HAPPY NEWS

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என அண்மையில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி தெரிவித்தனர். இந்நிலையில், உரிமைத் தொகையை ₹1,000-ல் இருந்து ₹2,000 வரை உயர்த்த அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குலவிளக்கு திட்டத்தில் மகளிருக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் என EPS தேர்தல் வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


