News January 20, 2026
PM மோடி மீதும் வழக்கு: ராமதாஸ் தரப்பு

பாமகவின் பெயர், சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை கோரி சென்னை HC-ல் ராமதாஸ் தரப்பில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய ராமதாஸ் தரப்பு வக்கீல், ஜன.23-ல் TN வரும் PM மோடி, கூட்டணி குறித்து அன்புமணியிடம் பேசினால் அவர் மீதும் வழக்கு தொடர்வோம் எனக் கூறினார். மேலும், அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி அமைத்தது சட்டவிரோதம் என்ற அவர், பாமகவின் தலைவர் ராமதாஸ் மட்டுமே எனக் கூறினார்.
Similar News
News February 2, 2026
கணவரின் ஆணுறுப்பை அறுத்த மனைவி

67 வயது கணவரின் ஆணுறுப்பை மனைவி அறுத்துக் கொலை செய்த சம்பவம் ஸ்பெயினை அதிர வைத்துள்ளது. கழுத்தில் கத்தியால் பலமுறை குத்தப்பட்டும், ஆணுறுப்பு அறுக்கப்பட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட உடலை போலீஸ் கைப்பற்றியுள்ளது. கைதான பெண்மணி குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டார்; ஆனால் கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
அஜித் பவாரின் இறுதிச் சடங்கில் திருடர்கள் கைவரிசை

மறைந்த DCM அஜித் பவாரின் இறுதிச் சடங்கில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அனைவரும் சோகத்தில் மூழ்கியிருந்த நிலையில், பலே திருடர்கள் 15 பேரிடம் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்றுள்ளனர். சுமார் 8,000 போலீசார் இருந்தபோதிலும், ₹30 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருடுபோனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News February 2, 2026
கடைசி ஆப்ஷனை கையில் எடுக்கிறாரா ராமதாஸ்?

திமுகவில் கூட்டணி கதவுகள் மூடப்பட்டதால், ராமதாஸ் தரப்புக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. 1) தவெகவுடன் கூட்டணி அமைப்பது, 2) NDA கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது, 3) வட மாவட்டங்களில் தனித்து போட்டியிடுவது. இதில் கடைசி ஆப்ஷனை கையில் எடுத்துள்ள ராமதாஸ், குறைந்தது 50 தொகுதிகளில் போட்டியிட முடிவு எடுத்துள்ளாராம். இந்த தகவல் கசிந்த நிலையில், அப்படி இல்லை என ஜி.கே.மணி மறுத்துள்ளார்.


