News January 20, 2026
சூடுபிடிக்கும் தங்கம் திருட்டு வழக்கு: 21 இடங்களில் ரெய்டு

<<18345270>>சபரிமலையில்<<>> தங்கம் திருடப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகம், கேரளா, பெங்களூருவில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்புடைய 21 இடங்களில் ED அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில், சென்னையில் தங்க முலாம் பூசும் நிறுவனம் தொடர்புடைய 6 இடங்களில் ED ரெய்டு நடைபெற்று வருகிறது.
Similar News
News February 6, 2026
டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா?

தொலைந்த டிரைவிங் லைசென்ஸை RTO அலுவலகம் செல்லாமலேயே ஆன்லைனில் பெறலாம் *<
News February 6, 2026
தேமுதிகவின் கூட்டணி முடிவு.. பிரேமலதா புதிய அறிவிப்பு

தேமுதிக எந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்பதை பிப்.17-ம் தேதிக்குள் அறிவிப்பேன் என பிரேமலதா உறுதியாக அறிவித்துள்ளார். கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்பமனு விநியோகத்தை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அவர், பல தரப்பினர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார். கடந்த 3-ம் தேதி கூட்டணி முடிவை அறிவிப்பதாக கூறிய பிரேமலதா அன்றைய தினம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News February 6, 2026
சம்பாதிச்சா வரி கட்டித்தான் ஆகணும்: தமிழிசை

‘புலி’ பட வரி ஏய்ப்பு விவகாரத்தில் விஜய்க்கு விதிக்கப்பட்ட ₹1.5 கோடி அபராதத்தை சென்னை HC உறுதி செய்துள்ளது. இது விஜய்யின் முறைகேட்டை காட்டுகிறது என விமர்சனங்கள் எழுகின்றன. இந்நிலையில், இதுகுறித்து பேசிய தமிழிசை செளந்தரராஜன், சம்பாதித்தால் வரி செலுத்திதான் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வந்தால் எல்லா விமர்சனங்களையும் தாங்கித் தான் ஆக வேண்டும் என்றும் அவர் கூறினார்.


