News January 20, 2026

கடலூர்: மனமுடைந்த முதியவர் தற்கொலை முயற்சி

image

ஆல்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நேற்று முதியவர் ஒருவர் தண்ணீரில் இறங்கினார். அப்போது அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால், அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த தனசேகர்(75), என்பதும் பிள்ளைகள் சரியாக கவனிக்காததால் மனமுடைந்து, தற்கொலை முயற்சித்ததும் தெரிய வந்தது. இதையெடுத்து, போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Similar News

News February 3, 2026

கடலூர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call’ என்ற <<>>ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 3, 2026

கடலூர்: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரியநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <>உழவன் <<>>App மூலமாக விண்ணப்பித்து, பெயரை ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த 70 சதவீதத்தில், 40 % முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

News February 3, 2026

கடலூர்: வாகன ஏலம் அறிவிப்பு – எஸ்.பி

image

கடலூர் மாவட்டத்தில் மது கடத்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளதாக எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் வரும் பிப்.12, காலை 10 மணியளவில் 79 வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என்றும், இதில் கலந்து கொள்ள விரும்புவோர் பிப்.10-ம் தேதி முன் வைப்பு தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என எஸ்.பி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!