News January 20, 2026

செங்கல்பட்டு: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு

image

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 3, 2026

செங்கல்பட்டு: கணவர் முன்னே உடல் கருகி பலி!

image

கேளம்பாக்கம் அடுத்த ஏகாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் டெய்சி(40). தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்தார். அவரது கணவர் சுதாகருக்கும் இவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 30ஆம் தேதி கணவரை மிரட்ட, உடலில் மண்எண்ணெய் ஊற்றிய போது, அடுப்பில் இருந்த தீ, டெய்சி மீது பற்றியது. இதில், படுகாயமடைந்த அவர், சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

News February 3, 2026

செங்கல்பட்டு: நொடி பொழுதில் கோரம்; தலைநசுங்கி பலி

image

தாம்பரம் அடுத்த படப்பையில், கணவரைப் பார்க்க ஆவலோடு சென்ற மனைவி பைக் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரைப் பார்ப்பதற்கு நேற்று (பிப்.2) துபாய் செல்ல இருந்த வர்ஷா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வேனின் கதவு திடீரென திறக்கப்பட்டதால், அதில் மோதிய வர்ஷா கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார்.

News February 3, 2026

செங்கல்பட்டு: இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று ( பிப்ரவரி-02) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!