News January 20, 2026
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

பொதுமக்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும் போது முன் பின் தெரியாத நபர்களிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுக்க வேண்டாம். மேலும் தங்களது பின் நம்பரை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் இதன் மூலம் தங்களது பணம் திருடு போக வாய்ப்புள்ளதாக மாவட்ட காவல் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
Similar News
News February 2, 2026
மயிலாடுதுறை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

மயிலாடுதுறை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
மயிலாடுதுறை: உங்களிடம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 2, 2026
மயிலாடுதுறை: தேசிய அளவிலான போட்டியில் வென்ற இளைஞர்

தேசிய அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள் கேரளாவில் அண்மையில் நடைபெற்றது. இந்த போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி வள்ளாலகரம் ஊராட்சியை சேர்ந்த குணசேகரன் என்பவர் கலந்து கொண்டார். இதில் தொடர் ஓட்டம் மற்றும் ட்ரிபிள் ஜம்பில் பங்கு பெற்று 3-ம் இடம் பிடித்து 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


