News January 20, 2026
தருமபுரி: பொங்கல் விழாவில் தகராறு – அதிமுக பிரமுகர் கைது!

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே மாதேஹள்ளியில் பொங்கல் திருவிழா நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், வேலாயுதம் என்பவரது குடும்பத்தினரை அதிமுக நிர்வாகி தர்மன் உள்ளிட்ட 6 பேர் தாக்கியுள்ளனர். பின், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், அதிமுக செயலாளர் தர்மன் உட்பட 6 பேர் மீது கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 26, 2026
தருமபுரி: வீடு கட்டப்போறீங்களா? இது முக்கியம்!

தருமபுரி மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
தருமபுரியில் தூக்கிட்டு தற்கொலை செய்த தொழிலாளி!

தருமபுரி மாவட்டம் , இண்டூர் அருகே, மனைவி தந்தை வீட்டிற்கு சென்ற துக்கத்தில் கட்டிட தொழிலாளி தட்சிணாமூர்த்தி (30) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், இண்டூர் போலீசார் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 26, 2026
தருமபுரியில் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (044-22310989 / 22321090) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.


