News January 20, 2026
காஞ்சிபுரத்தில் திக்குமுக்காடும் மக்கள்!

காஞ்சி: சேக்குபட்டியில் நாய்கள் அதிகமாக வீதியில் சுற்றுகின்றன. தாலுகா அலுவலகம், பேரூந்து நிலையம் செல்ல கவரை வழியாக செல்லவேண்டும். இந்தத் தெருவில் நாய்கள் இருப்பதால் மக்கள் பயத்துடன் வீதியை கடக்கும் நிலை உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு இந்த நாய்களால் விபத்து ஏற்படுகிறது. ஆகையால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News January 27, 2026
காஞ்சிபுரம்: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

காஞ்சிபுரம் உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள்.(SHARE)
News January 27, 2026
காஞ்சிபுரம் பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

காஞ்சிபுரம் மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்
News January 27, 2026
காஞ்சிபுரம்: ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை!

படப்பை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேஷின் மனைவி சந்தியா(23), கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், நேற்று(ஜன.26) அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் டிரைவர் சிரஞ்சீவி மற்றும் மருத்துவ உதவியாளர் குணசேகரன், சந்தியாவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியில் சிங்கபெருமாள் கோவில் அருகே அதிக வலி ஏற்பட்டதால், ஆம்புலன்ஸிலேயே பெண் குழந்தை பிறந்தது.


