News January 20, 2026

வேலூர்: பூட்டிய வீட்டில் நாற்றம்; திறந்தவுடன் அதிர்ச்சி!

image

திருப்பத்தூரை சேர்ந்த மணிவண்ணன் (50) பேரணாம்பட்டில் தபால்காரராக பணியாற்றி வந்தார். இவர் ஆயக்கார வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுயதால் பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது மணிவண்ணன் தலையில் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 8, 2026

வேலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே கிளிக் <>செய்து<<>> இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News March 8, 2026

வேலூர்: தனிமையில் போக பயமா? இனி கவலை வேண்டாம்!

image

சென்னை மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.

News March 8, 2026

காட்பாடியில் வெல்லப்போவது யார்?

image

நடைபெறவிருக்கும் தேர்தலில் காட்பாடி தொகுதி அரசியல் கவனம் பெற்றுள்ளது. திமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில்,1996 முதல் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் வெற்றி வாகை சூடி வருகிறார். ஆனால்,கடந்த 2021 தேர்தலில் அதிமுக – திமுக இடையேயான கடும் போட்டிக்கு மத்தியில், 776 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே துரைமுருகன் வென்றார். இந்நிலையில் வரும் தேர்தலில் காட்பாடி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!