News January 20, 2026

BREAKING: விஜய்யின் அடுத்த முக்கிய முடிவு

image

கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக விஜய்யிடம் நேற்றும் CBI கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. இதனிடையே, விஜய் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது தவறான தகவல் என CTR நிர்மல்குமார் கூறியுள்ளார். இதனால் மீண்டும் விசாரணை வளையத்திற்குள் வராமல், கரூர் வழக்கை சட்ட வல்லுநர்களுடன் கையாள விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Similar News

News February 8, 2026

கள்ளக்குறிச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

கள்ளக்குறிச்சி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

News February 8, 2026

காதலியுடன் சிக்கிய கணவன்..

image

காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் காதலியுடன் சிக்கியுள்ளார். திருவள்ளூர், அத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்த கவுசல்யா(20) திருமணமான 5 மாதங்களில் மர்மமான முறையில் உயிரிழந்தார். கவுசல்யாவின் அத்தை மகனும் கணவருமான ராஜேஷ்(30) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் தனது காதலி தீபிகா(21) உடன் சேர்ந்து கவுசல்யாவை ராஜேஷ் அடித்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. So Sad!

News February 8, 2026

தவெக கூட்டணியின் கொள்கை முடிவை கூறிய அருண்ராஜ்!

image

தவெகவுடன் கூட்டணியில் இணைவோருக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக அருண்ராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார். கோவையில் பேசிய அவர், தீய சக்தி திமுகவை வீழ்த்துவதே தங்களது முதன்மையான இலக்கு; கொள்கை என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதேநேரம், தற்போது கூட்டணி தொடர்பாக யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் கூறினார்.

error: Content is protected !!