News January 20, 2026
ஆட்டையாம்பட்டியில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்!

சேலம் மாவட்டம் நைனாம்பட்டி அருகே வழித்தடப் பிரச்சினை காரணமாக, 7 மாத கர்ப்பிணியான தரண்யா என்பவரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த கணபதி என்பவர் கல்லால் வயிற்றில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தரண்யா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஆட்டையாம்பட்டி போலீசார் கோவிந்தராஜ் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.
Similar News
News March 14, 2026
சேலம்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News March 14, 2026
BREAKING: சேலத்தில் மகனை கொலை செய்த தந்தை

இன்று சேலம் தாதனூரில் மது குடிக்கப் பணம் கேட்டு குடும்பத்தினரை அரிவாளுடன் துரத்திய மகன் சூரிய பிரகாஷை (24), தந்தை காமராஜே கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். மகனின் தொடர் டார்ச்சரால் ஆத்திரமடைந்த தந்தை, அவர் தூங்கும்போது இக்கொலையைச் செய்துள்ளார். தகவலறிந்த வீராணம் போலீசார் காமராஜைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 14, 2026
சேலத்தில் நவீன சாலையைத் தொடங்கி வைத்த முதல்வர்!

சேலம் மாவட்டத்தில் ரூ.985.18 கோடி மதிப்பீட்டில், 36.395 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட ஓமலூர் – சங்ககிரி – திருச்செங்கோடு – பரமத்தி சாலையைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நெடுஞ்சாலைத் துறை சார்பில் மொத்தம் 11 சாலைத் திட்டங்கள் தொடங்கப்பட்டதில், சேலத்தின் இந்த மெகா சாலைத் திட்டம் வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


