News May 6, 2024
நீட் தேர்வு மோசடியில் 50 பேர் கைது

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். MBBS, BDS படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது. இந்நிலையில், ராஜஸ்தானில் முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததாகவும், ₹20 லட்சத்துக்கு வினாத்தாள் விற்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மும்பையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 20 வயது மாணவர் ஒருவர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
தவெக மாநாட்டில் திடீர் மாற்றம்

மதுரை தவெக மாநாட்டு அரங்கில் <<17463695>>100 அடி உயரக் கொடிக்கம்பம் சரிந்து விழுந்த விபத்து<<>> பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் வடு மறைவதற்குள் ராட்சத ஃபோக்கஸ் லைட்டுகள் சரிந்து விழுந்தது. இப்படி அடுத்தடுத்து விபத்துக்கள் நடந்த நிலையில், விஜய் மாநாட்டு அரங்கில் ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில், சேதமடைந்த கொடிக்கம்பத்திற்கு மாற்றாக வேறு கொடிக்கம்பம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News August 20, 2025
அப்பாவை அசைக்க முடியாது: ஸ்ருதி உறுதி

‘தக் லைஃப்’ தோல்வி கமல்ஹாசனை பாதிக்கவில்லை என அவரது மகள் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். சினிமாவில் வெற்றி, தோல்வி என தனது தந்தை நிறைய பார்த்தவர் எனவும், சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை மீண்டும் சினிமாவில்தான் போடுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், இந்த நம்பர் கேம் ஒருபோதும் தந்தையை பாதிக்காது என தெரிவித்துள்ளார். ‘இந்தியன் 2’, ‘தக் லைஃப்’ என கமலின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன.
News August 20, 2025
புதிய சட்ட மசோதா நிறைவேற வாய்ப்புள்ளதா?

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கலான <<17459383>>புதிய சட்ட மசோதா<<>>, ஒரு அரசியலைப்பு சட்டத்திருத்தம் ஆகும். ஆகவே, இதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை (லோக் சபாவில் 362 எம்பிக்கள்) தேவை. NDA-வுக்கு 293 எம்பிக்கள் உள்ளனர். ராஜ்ய சபாவில் 164 எம்பிக்கள் தேவையென்ற நிலையில் NDA-வுக்கு 125 பேர் தான் உள்ளனர். இருந்தும் இந்த மசோதாவை பாஜக கொண்டு வந்துள்ளது. பாஜகவின் திட்டம் என்ன? எதிர்க்கட்சிகள் என்ன செய்யும்?