News January 19, 2026
ஜன நாயகன் வழக்கு.. புதிய பரபரப்பு தகவல்

ஜன நாயகன் தணிக்கை சான்று தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நாளை சென்னை HC-ல் விசாரணைக்கு வருகிறது. காலை 11:30 மணிக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடக்கும் என்றும், நாளையே தீர்ப்பு அளிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தடை நீக்கப்பட்டால் ஜன நாயகன் விரைவில் ரிலீசாகும். சென்சார் போர்டின் கோரிக்கை ஏற்கப்பட்டால் படம் ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பப்படும்.
Similar News
News February 6, 2026
விடுமுறை.. இன்று முதல் 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

வார விடுமுறையையொட்டி, மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல போக்குவரத்துத் துறை சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இன்று முதல் 3 நாள்களுக்கு சுமார் 750 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. நீங்களும் உடனடியாக <
News February 6, 2026
டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா?

தொலைந்த டிரைவிங் லைசென்ஸை RTO அலுவலகம் செல்லாமலேயே ஆன்லைனில் பெறலாம் *<
News February 6, 2026
தேமுதிகவின் கூட்டணி முடிவு.. பிரேமலதா புதிய அறிவிப்பு

தேமுதிக எந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்பதை பிப்.17-ம் தேதிக்குள் அறிவிப்பேன் என பிரேமலதா உறுதியாக அறிவித்துள்ளார். கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்பமனு விநியோகத்தை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அவர், பல தரப்பினர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார். கடந்த 3-ம் தேதி கூட்டணி முடிவை அறிவிப்பதாக கூறிய பிரேமலதா அன்றைய தினம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


