News January 19, 2026
நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ₹9,000 கோடி கேட்கும் டிரம்ப்

காசாவின் அமைதி வாரியத்தில் நிரந்தர உறுப்பினர் பதவி விரும்பும் நாடுகள் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (₹9,000 கோடி) செலுத்த வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது. இந்தியாவின் <<18893549>>PM மோடி <<>>உட்பட உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு பணம் செலுத்தவும், இந்த நிதி காசாவை மீண்டும் கட்டியெழுப்ப பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 30, 2026
டெல்லியின் அடிமையா திமுக? வைகோ பதில்

டெல்லிக்கு அதிமுக அடிமை இல்லை, திமுகதான் அடிமை என EPS வைத்த குற்றச்சாட்டுக்கு வைகோ பதிலடி கொடுத்துள்ளார். திமுக – காங்கிரஸை, பாஜக – அதிமுகவுடன் ஒப்பிட முடியாது எனவும், பாஜக எவ்வளவு அவமானப்படுத்தியும் அதை அதிமுக தாக்கிக்கொண்டதாவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில்தான் அதிகமான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
News January 30, 2026
EPS காலில் விழுகிறாரே, அதை என்னனு சொல்வது? ப.சிதம்பரம்

முன்னதாக ராகுல்காந்தி-கனிமொழி சந்திப்பை விமர்சித்த EPS, காங்கிரஸிடம் கெஞ்சும் நிலைமைக்கு திமுக வந்துவிட்டதாக கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ப.சிதம்பரம், இருவரும் சந்தித்தது கெஞ்சுவது என்றால், காலில் விழுவதற்கு என்ன பெயர் சொல்வது என அவர் கேட்டுள்ளார். மேலும், ஆட்சியில் பங்கு விவகாரம் குறித்து இரு தலைமைகளும் பேசி முடிவு செய்யவே இருவரும் சந்தித்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் பிரேமலதா

தேமுதிக இந்த தேர்தலில் தனித்து போட்டியிடாது என பிரேமலதா உறுதிபட தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் நாள்கள் உள்ளதால் சரியான நேரத்தில், சரியான கூட்டணி அமைத்து, அதுதொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என EPS நேற்று கூறியிருந்தார்.


