News January 19, 2026
பீர் குடித்த இளைஞர்கள் மரணம்!

ஆந்திராவில் போட்டி போட்டுக்கொண்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராந்தியையொட்டி சித்தூரை சேர்ந்த 6 இளைஞர்கள் மது அருந்தி கொண்டாடியுள்ளனர். இதில் மணிகுமார்(34), புஷ்பராஜ்(26) இருவரும் 19 பாட்டில் பீர் குடித்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Similar News
News January 29, 2026
இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து படைத்த சாதனை!

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் சில முக்கிய சாதனைகளை நியூசி., படைத்துள்ளது. அதன்படி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. டி20-யில் பலம் வாய்ந்த இந்திய அணியை அதிக முறை (5) இலக்கை எட்டவிடாமல் தடுத்து முதலிடம். மேலும் செப். 2023 முதல் 13 போட்டிகளுக்கு பிறகு நியூசி. முதல் வெற்றி பெற்றுள்ளது.
News January 29, 2026
தொண்டர்களின் விருப்பமாக கூட்டணி அமையும்: பிரேமலதா

கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தலைமை கழகத்தில் இருந்து அறிவிப்பேன் என பிரேமலதா தெரிவித்துள்ளார். புளியங்குடியில் பேசிய அவர், கடைக்கோடி தொண்டர்களின் விருப்பத்தின் படியே இந்த முறை கூட்டணி அமையும் என்றும், நாம் இடம்பெறும் கூட்டணி தான் இந்தமுறை ஆட்சி அமைக்கும் எனவும் கூறினார். அப்போது அங்கிருந்த தொண்டர்கள் சிலர், தவெக தவெக என கோஷமிட்டதால் அப்பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
News January 29, 2026
பாரதிதாசன் பொன்மொழிகள்

*கலை உயர்ந்து இருக்க, எண்ணங்களும் உயர்ந்து இருக்க வேண்டும். புதியதோர் உலகம் செய்வோம் கெட்டபோரிடும் உலகத்தை சாய்ப்போம். *செயலை செய்ய எண்ணித் துணிபவனுக்கே வெற்றி கிடைக்கும். *எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. *நன்மை கொடுக்கும் கல்வி இல்லாத வீடு இருண்ட வீடு!


