News January 19, 2026
சபரிமலை நெய் மோசடி.. 33 பேர் மீது வழக்கு

சபரிமலையில் ஏற்கெனவே தங்கம் திருடப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது நெய் மோசடி அம்பலமாகியுள்ளது. போலியான அபிஷேக நெய் பிரசாத பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ₹36.24 லட்சம் மோசடி நடந்தது கண்டறியப்பட்ட நிலையில், தொடர்புடைய 33 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
Similar News
News January 30, 2026
வங்கி கடன் அபராதம் தள்ளுபடி.. முக்கிய அறிவிப்பு

வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், RBI முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வழக்கமாக, கடனை முன்கூட்டியே செலுத்துவோரிடம் 3- 4% வரை அபராதத் தொகையை வங்கிகள் வசூலிக்கும். 2026 ஜன.1 முதல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தின்படி, கடன் பெற்றவர்களுக்கே இது பொருந்தும். ஃபிக்சட் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்கள் இதில் பயன்பெற முடியாது. SHARE IT.
News January 30, 2026
கனிமவள கொள்ளை.. சர்ச்சையில் சிக்கிய திமுக MLA

கரூரில் கல்குவாரி கொள்ளை குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை திமுக MLA பழனியாண்டியின் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படும் விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள அண்ணாமலை, திமுக MLA-வின் கனிமச் சுரண்டலை கேள்வி கேட்டதற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. திமுக அரசு, யாருக்காக ஆட்சி நடத்துகிறது, கடத்தல்காரர்களுக்கும், ரவுடிகளுக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 30, 2026
கணவர் ‘குரங்கு’ என்றதால் மாடல் அழகி தற்கொலை

குரங்கு மாதிரி இருக்கும் உனக்கு நடிப்பு தேவையா என கணவர் சொன்னதால் மனமுடைந்த நடிகை தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவை சேர்ந்த தன்னு சிங்(23) மாடலிங், குறும்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், அவரது கணவர் ராகுல் ஸ்ரீவஸ்தா, தன்னு சிங்கை ‘Bandariya'(குரங்கு) என கேலி செய்துள்ளார். இதனால், மனமுடைந்த அவர், பெட்ரூமில் உயிரை மாய்த்துக்கொண்டாராம். யாரையும் உருவக்கேலி செய்யாதீங்க!


