News January 19, 2026
FLASH- சென்னை: இளைஞருக்கு அரிவாள் வெட்டு.. 3 பேர் கைது

சென்னை அடுத்த வேளச்சேரியில் ZEPTO ஊழியர் பார்த்திபன் என்பவரை வெட்டிக்கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பார்த்திபன் என்பவரை வெட்டி கொலை செய்ய முயன்ற விஷ்ணு, சுந்தர், நந்தார் ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில், எஞ்சிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். தீபாவளியன்று பார்த்திபன் தாக்கியதால் பழிக்குப்பழியாக மதுபோதையில் அரிவாளால் வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Similar News
News February 11, 2026
சென்னையில் 13 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சென்னையில் 13 இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமிஷனர் அருண் நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தார். வியாசர்பாடி குற்றப்பிரிவுக்கு தாஹிராவும், கோட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு லில்லியும் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சந்திரசேகரன் எம்.கே.பி.நகருக்கும், காளிராஜ் ஆர்.கே.நக ருக்கும், லதா மகேஸ்வரி ஐகோர்ட்டுக்கும், பாஸ்கர் கோட் டூர்புரத்துக்கு என 13 இன்ஸ்பெக்டர்களை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
News February 11, 2026
சென்னை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News February 11, 2026
சென்னை: கேக்கில் விஷம் கலந்து குடும்பத்திற்கே தந்த கொடூரம்

சென்னை பெரம்பூரை சேர்ந்த சகாயம் செபஸ்டின் என்பவது மனைவி பியூலா புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மன வேதனையில் இருந்த சகாயம் செபஸ்டின் கேக்கில் விஷம் கலந்து மனைவி, மகன், மகளுக்கு கொடுத்து தானும் உண்டுள்ளார். இதனால் சகாயம் செபஸ்டின், அவரது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மனைவி, மகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*.


