News January 19, 2026
கமுதி: அடங்கல் சான்றிதழுடன் விவசாயிகள் போராட்டம்

கமுதி அருகே செய்யாமங்கலத்தில் மழையின்றி நெல் பயிர்கள் கடுமையாக கருகி சேதமடைந்துள்ளன. சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். பாதிப்பு கணக்கெடுத்து உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி, விவசாயிகள் தங்கள் வயல்களிலேயே அடங்கல் சான்றுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News January 30, 2026
இராமநாதபுரம்: இரவில் ஆடுகளை திருடும் கும்பல்

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள சமத்துவபுரத்தில் வீடுகளில் வளர்க்கும் ஆடுகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தொடர்ந்து திருடி வருகின்றனர். இது குறித்து காவல் இப்பகுதி மக்கள் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் காவலர்கள் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
News January 30, 2026
பரமக்குடி பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளான சத்திரக்குடி, போகலூர், நயினார்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள 110/33-22 -11 துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறும் காரணத்தினால் நாளை (ஜன.31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் செய்தி தொகுப்பில் தெரிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை பொதுமக்கள் செய்து கொள்ளும்படியும் கேட்டுக்
கொள்ளப்படுகிறது. *ஷேர் பண்ணுங்க
News January 30, 2026
இராம்நாடு: Spam Calls-க்கு இனி END

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். நெல்லை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


