News January 19, 2026

சிவகங்கை: விவசாயி தற்கொலை செய்து கொண்ட சோகம்

image

பீர்க்கலைக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (46). விவசாயி மற்றும் கூலி வேலை செய்து வந்த இவர், மது போதைக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முருகேசனின் மனைவி பாண்டிச்செல்வி மற்றும் அவரது குழந்தைகள் அவரை கண்டித்ததாக கூறப்படும் நிலையில், வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 2, 2026

சிவகங்கை: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க..

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், சிவகங்கை மாவட்ட மக்கள் 04652-227339 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News February 2, 2026

சிவகங்கை: கூட்டு பட்டாவை மாற்ற புதிய வழி

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.

1.கூட்டு பட்டா,

2.விற்பனை சான்றிதழ்,

3.நில வரைபடம்,

4.சொத்து வரி ரசீது,

மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.

News February 2, 2026

சிவகங்கை: NO EXAM.. ரூ.29,380 சம்பளத்தில் போஸ்ட் ஆபிஸ் வேலை

image

சிவகங்கை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள்<> இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!