News January 19, 2026

கடலூர்: ரூ.25 கோடிக்கு விற்பனை – புதிய உச்சம்!

image

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை விமர்சியாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 135 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் ஜனவரி 14,15 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களில் மட்டும், ரூ.25.29 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட 2 கோடியே 46 லட்சம் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆண்டுதோறும் புதிய உச்சம் தொடும் மது விற்பனை கடலூர் மாவட்ட மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News February 2, 2026

கடலூர்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 2, 2026

கடலூர்: நூதன முறையில் திருட்டு- போலீசார் அதிரடி

image

கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொஞ்சுக்குப்பத்தைச் சேர்ந்த தனலட்சுமி (75) என்பவர் 12.6.2025 அன்று எலும்பு முறிவு சிகிச்சைக்காக வந்தார். அப்போது அவரிடம் எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என நூதன முறையில் தங்க செயினை கழட்டி கொடுக்க சொல்லி தப்பிவர் குறித்து புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த சித்திரவேல் (48) என்பவரை நேற்று கைது செய்தனர்.

News February 2, 2026

கடலூர்: லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி

image

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த வலசக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி மதிவாணன் (45). இவர் நேற்று தனது பைக்கில் எறும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே சென்றபோது, அவ்வழியே வந்த லாரி ஒன்று பைக் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய மதிவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!